Tuesday, August 18, 2009

போலித் தமிழ்த் தேசியவாதியுடன் ஒரு விவாதம்!!

http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html

புரளி பேசும் போலித் தமிழ் தேசியவாதிகள் கட்டுரையில் என்னுடம் விவாதித்தார் ஸ்டாலின் குரு.

அவரது வடிவேலு பாணி திரும்ப திரும்ப திரிம்புதல்(திரிப்புதான்) தாங்க மாட்டாமல் கீழ்கண்ட பின்னூட்டத்தை போட்டிருந்தேன்.

அந்த குறிப்பிட்ட கட்டுரையில் பல்வேறு விசயங்களை முன் வைத்த போதும் அவை எதையுமே உள்வாங்கமால் கிளிப் பிள்ளை போல பேசிய ஸ்டாலின் குருவிடம் அப்போதைக்கு என்னால் கொடுக்க இயன்ற பதில் கீழே இருந்ததுதான்.



http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html

#############
Thozar Stalin Guru,

Very little time to spend in Web. So unable to respond to anything.

@@@
ஒரு தரப்புக்கும் மட்டும் செவி கொடுத்தால் இருளை அடைவாய்,இரு தரப்புக்கும் செவி கொடு அறிவு பெறுவாய்
@@@@@@

Hope you are following this advise and have digested my arguments so far.

I will be following this advise henceforth.
Asuran
###########



ஏனேனில் இந்த பின்னூட்டத்தை படித்த பிறகாவது நடந்துள்ள விவாதங்களை மெதுவாக அவர் பரிசிலிப்பார் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்தேன். அதையே பின்வாங்கி ஓடிவிட்டதாக கதை விடுகிறார்.

அந்த கட்டுரையில் நடந்துள்ள விவாதங்களை படித்தால் புரியும்.

ஸ்டாலின் குருவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இடப்பட்ட எனது பின்வரும் பழைய பின்னூட்டங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லாமலேயே வேறு தளங்களுக்கு அவர் பயனித்து சென்று கொண்டே இருந்தார். உண்மையிலேயே இப்படிப்பட்ட குரங்கு பல்டி விவாதக்காரருடன் விவாதிப்பது கடினமே. அந்த வகையில் எனது தோல்வியை ஒப்புக்கொள்ள நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

ஸ்டாலின் குருவுடன் விவாதிக்க தயாராகும் தோழர்கள் கீழே உள்ள கேள்விகளை சுற்றி கறாரக விவாதம் நடத்தினால் அவரது புலம்பல் எல்லை மீறிப் போவதை கண்கூடாக காணலாம்.


##########
சர்வதேச அழுத்தங்கள் புலிகள் மீது மட்டுமா அதிகரித்துச் செல்கின்றன ஸ்டாலின்?

லங்கா தேசிய வெறி ஆளும் வர்க்கத்தின் மீதும்தான் சர்வதேச நெருக்கடி அதிகரித்துச் சென்றுள்ளது.

ஏனேனில் இவர்கள் இருவரும் சர்வதேச சுரண்டல் தேசங்களின் விருபப்த்திற்க்கு முரனில்லாத அளவில் மோதிக் கொண்டு ஏகாதிபத்தியங்களின் ஆளுமையை உறுதி செய்யத்தான் அனுமதி உண்டு.

அதை மீறி சென்றால் நார்வே வந்து மத்தியஸ்தம் செய்யும்.

ஏன் சர்வதேசங்கள் நினைத்தால் விடுதலைப் புலிகளை ஒழிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

உலகம் முழுவதும் சனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுப் போயுள்ளது புலிகள் அமைப்பு.

தமிழீழத்தின் மீது நாளை ஒரு பகுதி அளவிலான நாடுகளின் தாக்குதல் நடந்தால் ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாடுகளில் குடியேறிய ஈழத் தமிழர்களின் எதிர்ப்பு தவிர்த்து இந்திய துணைக் கண்ட பகுதியில் எந்த வொரு பெரிய எதிர்ப்பும் இருக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலிகளின்/லங்கா தேசிய வெறி கும்பலின் இன்றைய உயிர்ப்பு என்பது ஏகாதிபத்தியங்கள கொடுத்துள்ள விசயம்தான்.

தேசிய இன முரன்பாடு என்பதன் மூலவேர் அங்கு வர்க்க முரன்பாடில் புதைந்துள்ளது. அதனால்தான் ஒரே தேசிய இனத்தை சேர்ந்த தமிழர் தொழிலாளர்களின் போராட்டத்தை இந்திய தரகு முத்லாளிகளின் தேவைக்காக
ஒடுக்க முன் வந்தது புலி அரசு.



//சிங்கள தரகு முதலாலித்துவத்துக்கு எதிராக சிங்கள இனத்தில் ஒரு வலிமையான மார்க்சிய கட்சி கட்டப்படும்வரை தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகலை பொருத்துக்கொண்டிருக்க வேண்டுமா? //

சிங்கள் தரகு முதலாளித்துவதுக்கு எதிராக ஏன் ஈழத் தமிழர்களின், லங்கை சிங்களர்களின் நலனை முன்னிறுத்தும் ஒரு கட்சி கட்டக் கூடாது.

மன்னிக்கவும் ஸ்டாலின், ஈழப் பிரச்சனை குறித்து என்னிடம் விரிவாக விவாதம் செய்யலாம் என்று நினைத்தால் என்னால் இயலாது. ஏனேனில் ஈழத்தின் வரலாற்றில் பெரிய அறிமுகம் இல்லாதவன் நான்.

இதை சொல்வத்ற்க்கு வெட்கப்படுகிறேன். ஆயினும் இந்திய சூழலை புரிந்து கொள்வதே இன்னும் நான பெரிய அளவில் செல்லவில்லை எனும் போது ஈழத்தை புரிந்து கொள்வதில் இன்னும் நான் போக வேண்டிய பாதை பெரிய அளவில் உள்ளது.

இதனாலேயே ஈழம் குறித்த விவதாங்களை நான் தவிர்க்கிறேன்.


//ஒப்பீட்டளவில் பலமான செயல்பாடுகளை கொண்டிருக்கும் சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகள் தங்களது தேசிய இன சொத்துக்களான தாதுபொருட்களையும் இரும்பையும் ஏகாதிபத்தியங்கலும் தரகு முதலாலித்துவமும் கொள்ளையடிப்பதை தடுக்க தேசிய இன விடுதலை போராட்ட வழிமுறையை ஏற்றால் மக்களின் முழு ஆதரவையும் வென்றெடுக்க முடியுமா இல்லை இல்லை இந்திய புரட்சி என்னும் வழிமுறையாலா
//

தமிழக்த்தில் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய கும்ப்லை தேசிய இனம் என்ற பெயரில் விரட்டிவிட்டு என்னவிதமான புரட்சிகர தேசியததை கட்டியமைக்க முடியும்? சொல்லுங்கள்.

இந்தியா அப்படியே தேசிய இனங்களாக வெகு தெளிவாக பிர்ந்துள்ளதா?

பிஹார் தொழிலாளியை அடித்து கொல்லும் அண்டை மாநிலக்காரக்களையும், தமிழர்களை அடித்து விரட்டும் அண்டை மாநில காரர்களையும் கொண்டுள்ள நாட்டில் இந்த பிரிவினையை இன்னும் இன்னும் வீரியமாக்குவது மக்களின் அரசியலை எந்த பக்கத்திற்க்கு கொண்டு செல்லும்?

சக தேசிய இனத்தின் மீதான விரோதத்தின் மீதா அல்லது பார்ப்ப்னிய ஏகாத்பத்தியத்தின் மீதா?

இது இந்திய தேசிய இனங்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு நிரந்தரமாக ரத்த குடிக்கும் இலங்கை நிலைமையை இங்கு உருவாக்காது என்பதற்க்கு எனன் உத்திர்வாதம் உள்ளது?

அசுரன்
##########

#########

//ஏகாத்திபத்தியத்தாலும் பார்ப்பனியத்தாலும் ஒடுக்கப்படும் இந்திய தேசிய இனங்கலின் ஐக்கிய முன்னனி கட்டும் உங்கள் வழிமுறை புல்லரிக்க வைக்கிற்து //

அது சரி தேசிய இனங்களை வைத்து கட்சி கட்டும் உங்களது நடைமுறை செல்லரித்து போய்விட்டது குறித்து என்ன கருத்து வைத்துள்ளீர்கள் ஸ்டாலின் குரு.?

இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையின் கீழ் மக்களை அணி திரட்டி நிலபிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து புரட்சி செய்த ஒரேயோரு வரலாற்றை எனக்கு காட்டுங்கள் பிறகு தேசிய இனக் கோரிக்கையை பிரதானப்படுத்தும் உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

ஏன் அப்படி ஒரு உதாரணம் உங்களால் வைக்க இயலவில்லை ஸ்டாலின் குரு.

//இந்திய புரட்சி பற்றி நீங்கல் கூறியுள்ளவைகளை பற்றி பெரிதாக அலட்டி கொள்ள வேன்டியதில்லை என்றே நினைக்கிறேன்//


தேசிய இன முரன்பாடுகள் குறித்து நீங்கள் குறீப்பிடுவனவற்றை நான் அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியவை இல்லை என்று கருதுகிறேன்.

இப்படி முடி வெடுப்பதற்க்கு நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஒரு விசயம் முக்கியமா இல்லையா என்பதை அது மக்களை பாதிக்கும் அம்சத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதே மக்கள் விடுதலைக்கு போராடுப்வனின் அனுகுமுறையாக இருக்கும்.

தோழர் ஸ்டாலின் குரு இந்த அம்சத்தில் ஏகாதிபத்தியம், பார்ப்னியத்தை எதிர்த்து அகில இந்திய கட்சி கட்டுவதா அல்லது தேசிய இன ரீதியில் மக்களை பிரித்து இந்திய மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை திருப்பி விட்டு ஏகாதிபத்தியம், பார்ப்னியம் வயிறு வளர்க்க உதவி செய்வதா என்பதை சொல்லுங்கள்.

அல்லது போன முறை கேட்டது போல தமிழ் தேசிய கட்டியமைத்து இங்கிருந்து ஏகாவை விரட்டி விட்டு ஒரு சோசலிச குடியரசு அல்லது புதிய ஜனநாயக அமைப்பை நிறுவிய பிற்ப்பாடு எப்படி அதனை கட்டி காக்க முடியும் என்ற ரகசியத்தை சொல்லுங்கள்.

ஏனேனில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழக்ம் இந்திய சிறைக்கூடத்துடன் வெகு பலமாக இணைக்கப்ப்ட்டுவிட்டது. வேண்டுமானால் மக்களிடம் சென்று தனி தமிழ நாடு கோரி பிரச்சாரம் செய்யுங்கள் என்ன எதிர்வினை வருகிறது என்று பாருங்கள்.

அதிகப்ட்சம் தேசிய இனக் கோரிக்கை என்பது கர்நாடக் மக்களுக்கு எதிராக தமிழர்களை அணி திரட்ட மட்டுமே பயன்படும், அப்படி திரளும் கூட்டத்தை வைத்து ஏகா, நிபியின் ஒரு ம்சிரைக் கூட பிடுங்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஏனெனில் தமிழகம் முழுவதும் இருப்பவ்ர்கள் தமிழர்கள் அல்ல - அவர்கள் சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பிளவு பட்டுள்ளனர். அவர்கள் பார்ப்னியத்துடனும், நிலபிரபுத்துவத்துடனும் பல்வேறு வகையில் உறவு கொண்டுள்ளனர்.

இந்த உறவுக்கு குந்தகம் இல்லாத வகையில் தேசிய இனம் கோரிக்கை பயனப்ட்டால் வெற்றி தரும். இந்த உறவுக்கு குந்தகம் வரும் எனும் பொழுது தெரியும் சேதி தேசிய இன உணர்வின் உண்மையான அடித்தளம் எனன்வென்பது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக முக்கியமான தந்திரம் ஒரு நாட்டின் அனைத்து தரப்பு விருப்ப முரன் குழுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சி குழுக்களையும் ஊழல் படுத்தி தனது உளவு அமைப்பாக ஏதோ ஒரு வகையில் வைத்திருப்பதுதான்.

க்யுபா பிடல் காஸ்ட் ரோவை க் கூட அந்த வகையில் பயன்படுத்த விளைந்து(ஏனேனில் புரட்சிக்கு பின்புதான் கஸ்ட் ரோ தனது அமைப்பை கம்யுனிஸ்டு என்று அறிவித்தார்) அவருக்கு பணமும் ஆயுதமும் கொடுத்தது. இப்படி பிடல் காஸ்ட் ரோ நெருக்கடி கொடுத்தால்தான் பாடிஸ்டுடா அமெரிக்கா சொல்படி கேட்பார் என்பதுதான் லாஜிக்.

இதே விசயம்தான் இந்தியா, பாகிஸ்தான் விசயத்திலாகட்டும், சீனா இந்தியா முரன்பாடாகட்டும்,

வளைகுடா அரசியலாகட்டும், லங்கா-புலிகள் ஆகட்டும் எல்லா இடத்திலும் இதேதான் கதை.

புலிகளுக்கு CIA உதவவில்லை என்று சொல்கிறீர்களா?

CIA சமீபத்தில் தலிபானின் துணை அமைப்பு ஒன்றுக்கு மீண்டும் உதவி செய்து அம்பலமான கதை தெரியுமா உங்களுக்கு?

பிரிவினையை ஓட்டி மக்களை அவர்களுக்குள் மோத விட்டு ரத்தம் குடிப்பதுதான் ஆளும் வர்க்கங்களின் தந்திரம் அது புரியாமல் சக ஒடுக்கப்ப்டும் தேசிய இனத்துடன்தான் முதலில் முரன்படுவேன் என்று சொல்வது என்ன வகை தீர்வு என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்.

அப்புறம் தேசியம் என்பது தேசிய இனத்தையே குறிக்கிறது(பார்ப்ப்னிய தேசியம் என்று சொல்லும் இடம் தவிர்த்து). எனவே லங்க தேசிய வெறி கும்பல் எனும் போது அது இன வெறி கும்பலையே குறிப்பிடுகிறேன்.

அசுரன்
############


############
இப்பொழுது சில அடிப்படைக் கேள்விகள்

தேசிய இனமாகத்தான் பிரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமென்ன? அதன் முக்கியத்துவம என்ன?

நீங்கள் ஒரு கம்யுனிஸ்டா அல்லது வேறு ஏதேனும் மாற்று திட்டம் கொண்டவரா?

மாற்று திட்டம் கொண்டவர் எனில் தனி தேசியம் எனப்தில் உள்ள சிக்கல்கள் என்று நான் குறிப்பிடுபவை குறித்து கருத்துச் சொல்லவும்(ஏகாவுக்கும், நிபிக்கும் சாதகமாக மக்களை பிரிப்பது குறித்து).

காவெரி பிரச்சினைக்கு உங்களது தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு உள்ளது.

தனித் தேசியம் எனப்தை எத்தனை நாள் கொண்டு செல்வீர்கள்?

பிற தேசிய இனங்களுடனான உங்களது உறவு எப்படி இருக்கும்?(எ-கா கர்நாடகா)

அசுரன்
############

###########
ஸ்டாலின் குரு,

எனது கேள்விகளும் வெகு எளிமையானவையே. நீங்கள் எழுப்பியவையெல்லம் இந்திய அரை நிபி சூழலினால் விளைந்த தேசிய இன பிரச்சனைகளே.

இவற்றை தனித் தேசியமாக இருந்து எப்படி தீர்ப்பீர்கள் என்று சொல்லுங்கள்.

இதற்க்கு உங்களால் பதில் சொல்ல இயலவில்லையே?

வெறுமே இந்தியா என்று பேசுவதே தேசிய இன உரிமையை மறுப்பது என்றும் பார்ப்ப்னியம் என்றும் திரும்ப திரும்ப சொல்கிறீர்களே ஒழிய இதனை மறுத்து தேசிய இனங்களின் கூட்டுச் சர்வாதிகாரம் குறித்தும் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசியங்கள் கூட்டிணைவு குறித்தும் கருத்துச் சொல்ல மறுக்கிறீர்களே?

தேசியங்கள் தனியாக இருந்துதான் வளர வேண்டும் என்பது எந்த வரலாற்றுக் கட்டத்திற்க்கான பரிணாம வளர்ச்சி?

தேசியங்கள் பலவந்தமாக இணைக்கப்பட்ட ஒரு கட்டத்தில், முதலாளித்துவம் புரட்சி செய்வது என்பது இனிமேல் கனவில் மட்டுமே சாத்தியம் என்ற ஒரு வரலாற்று கட்டத்தில் தேசியங்கள் தனியாக புரட்சி செய்யும் என்று சொல்வது எனக்கு புரியாத விசயமாக இருக்கிறது.

தேசியங்கள் கூட்டு சர்வாதிகாரம் நடத்தியதற்க்கும், பிரிந்து செல்லும் உரிமையை வெகு விமரிசையாக பயன்படுத்தியதற்க்கும் எடுத்துக்காட்டுகளாக ரஸ்யாவை காட்டியதற்க்கும் பதில் சொல்ல மறுக்கிறீர்க்ளே?

ஒரு வேளை தேசியமாக இருந்து கொண்டு தேசத்தை எப்படி காக்க முடியும் என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கீறீர்களே?

கர்நாடகவில் காவிரி பிரச்சனைக்கு இந்தியா என்ற தேசிய கூட்டு சர்வாதிகாரத்தில் தீர்வு உண்டு என்று நான் சொல்கிறேன். நீங்கள் மறுக்கிறீரக்ள் எனில் தனித் தமிழ் தேசியத்தில் என்ன தீர்வு என்று சொல்லுங்கள்?

வெறுமே குற்றம் சாட்டுவது என்றால் இன வெறியருக்கும், சமூக அக்கறை கொண்டவருக்கும் என்ன வேறுபாடு இருந்து விடப் போகீறது?

கர்நாடகாவின் தேசிய உணர்வு என்பது பார்ப்ப்னிய சாதி கட்டுமாணத்துக்கு உட்பட்டு ஏகாதிபத்திய சேவை செய்ய மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயன்படுத்தும் ஒரு விசயமே அன்றி அது எந்த வகையிலும் கர்நாடக தேசியத்தின் வளர்ச்சிகான அரசியல் முன்னெடுப்பு அல்ல என்று நான் குறிப்பிட்டிருந்த விசயம் குறித்தும் உங்களிடம் எந்த எதிர்வினையும் இல்லையே?

உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்று சொன்ன மார்க்ஸ் பார்ப்ப்னிய வாதியா?

நீஙக்ள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியார்களாக சில நூறு ஆண்டுகள் இந்த நிலப்பரப்பு ஒன்றிணைந்தே உள்ளது. வட கிழக்கும் மகாணங்கள், காஷ்மீர் தவிர்த்து பிற பகுதிகளில் தேசிய இன கோரிக்கை என்பது வலுவானதாக நிற்கும் வரலாற்று பின்புலம் இல்லை. இப்படி இருக்க வரலாற்றை பின்னுக்கு இழுக்கும் முயற்சியினால் என்ன சாதிகக் விரும்புகிறீர்கள் என்பது எனக்கு புரியாத காரணத்தினாலேயே நான் திரும்ப திரும்ப சில கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

நீங்களோ தேசிய இன முரன்பாடு இருப்பதை மட்டும் மீண்டும் பிரதானப்படுத்தி பேசுகிறீர்கள். இந்த முரன்பாட்டை வளர்க்கும் காலனிய சூழல் குறித்தோ, உற்பத்தி சக்திகள் வளராமல் இருப்பது, இந்திய சமூகங்களின் ஒட்டு மொத்த ஜனநாயக மின்மை இப்படி விசயங்களை மறந்து விட்டு வெறுமே பக்கத்துக்கு தேசியத்தின் மீது பலி போட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்று கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.

தமிழ் தமிழ் என்ற தமிழின் வளர்ச்சிக்கு உணர்வுப் பூர்வமாக உழைக்க முன்வருவது சரிதான். ஆனால் யாதார்த்தத்தை உள்வாங்காமல் என்ன செய்து விட முடியும் என்று தோழர் நீங்களே சொல்லுங்கள்?

முரன்பாடின்றி இந்தியாவில் உள்ள தேசியங்களிடையே உள்ள பிரச்சனைகளை தீர்ப்பது குறித்துதான் எனது பல கட்டுரைகளும் இங்கு பேசியுள்ளன.

ஒரே தேசியமாக இருந்து ஏகாதிபத்தியத்தையும், நிலபிரபுத்துவத்தையும் எதிர்த்து விரட்டும் கூட்டணி அமைக்க முடியுமெனில், பகுதி அளவிலான தேசிய இயக்கங்கள் இதற்க்காக தமது உள் முரன்பாடுகளை பின் தள்ளி ஒன்றிணைய முடியாது என்று ஏன் சொல்கிறீர்கள்?

//எனது கேள்வி தெளிவானது தமிழ் தேசிய இனத்தை சேர்ந்தவர்கலை இந்தியனாக மாற்றி அனுப்பி உள்ளதாக கூறி உள்ளேன்
ஒடுக்கப்படும் பிற தேசிய இனங்கலின் மக்களோடு தமிழ் தேசிய பாட்டாளி வர்க்க ஐய்க்கியத்துக்கு நிகழ்ச்சி எவ்வாரு உதவியது என்பதுதான்//

தேசியங்களின் புரட்சி காலவதியாவதற்க்கு முன்பே தேசிய்ங்களின் கூட்டுக்கு அழைப்பு விடுத்து ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்திற்க்கும் விடுதலை கோரிய தென்னக விடுதலை மரபை முன்னிறுத்தியதுடன் அல்லாமல். தேசியம் எனற பெயரில் முன்னிறுத்தப்படும் முரன்பாடுகள் எல்லாமே வளங்களின் மீதான ஏகாதிபத்திய நிபி சுரண்டலையே அடிப்படைப் பிரச்சனையாக கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தி, இந்தியா என்ற கூட்டிணைவின் கீழ் ஏகாதி, நிபி எதிர்ப்பு பொது நோக்கத்தின் கீழ் போராட வேண்டிய தேவையை முன்னிறுத்தியது தமிழ் மக்கள் இசை விழா. இது எந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட விசயத்தை நிவர்த்தி செய்யவில்லை என்று நீங்களே சொல்லுங்கள்.

எனக்கு ஒரு விசயம்தான் புரியவில்லை. இந்தியாவில் தேசியம் என்ற பெயரில் நடைபெறும் முரன்பாடுகள் உண்மையில் தேசியத்தின் நலனுக்கானதாக இருக்கீறதா அல்லது வேறு ஏதேனுமா?
எ-கா: காவிரி பிரச்சனை.

தேசியம் என்பது அதன் முழு முதல் வடிவை இந்தியாவில் எங்காவது எடுத்துள்ளதா?

தேசியம் என்ற கோரிக்கை சில குறிப்பான விதிவிலக்குகள் தவிர்த்து யாருடைய அரசியல் ஆயுதமாக இந்தியாவில் உள்ளது?

இதற்க்கு நீங்கள் சொல்லும் பதில்தான் பிரச்சனைகள் குறித்த உங்களது புரிதல் மட்டம் என்ன என்பதனை தெரியப்படுத்துவதுடன், தீர்வு என்று நீங்கள் சொல்லும் விசயத்தின் சாத்தியப்பாடு குறித்தும் புரிந்து கொள்ள உதவும்.

அசுரன்
###############


Contn 2....


############
தோழர் ஸ்டாலின் குரு மீண்டும் சில விசயங்களை உள்வாங்கவே மறுக்கிறீர்கள்.

இந்தியாவிலோ அல்லது வேறு எந்த காலனிய நாட்டிலோ தேசிய இனப் பிரச்சனை இருப்பதை எங்குமே நான் மறுக்கவில்லை. ஆனால் இதற்க்கு தனித் தேசியம் எந்த வகையில் தீர்வு எனப்தைத்தான் எனது கேள்விகள் முன்னிறுத்துகின்றன.

அவற்றை கொஞ்சம் பரிசீலியுங்களேன். அதை விடுத்து தேசிய இனப் பிரச்சனைகளை பட்டியலிடுவது எந்த வகையிலும் உதவப் போவதில்லை.

கன்னட வெறிக் கும்பல் தேசிய இன உரிமைக்கான கும்பலா என்பது எனது கேள்வி அதற்க்கு உங்களிடம் எதிர்வினை இல்லை.

பதிலையும் நானே சொல்லியுள்ளேன். அது ஒரு நிலபிரபுத்துவ கும்பல் என்று. அதை வலியுறுத்தும் சில விசயங்களையும் சொல்லியுள்ளேன். இதற்க்கும் உங்களிடமிருந்து எதிர்வினை இல்லை.

ஒரு நிலபிரபுத்துவ கும்ப்லை தேசிய கும்பல் என்று சொல்லி தமிழக மக்களை அணி திரட்டி என்ன சாதித்து விடமுடியும். எதிரியையே சரியாக வரையறுக்காத ஒரு போராட்டம் உண்மையில் யாருக்கெதிராக் கடைசியில் முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இங்கு கடவுள் எல்லாவல்ல தரகு- ஏகாதிபத்திய கும்பல்தான்.


//இந்திய தகவல் தொழில்நுட்ப குடிசையின், த்ரகு பொருளாத்தாரத்தின் ஆனி வேரை அசைக்கும் போராட்ட வழிமுறை எது
//

புதிய ஜனநாயகப் போராட்டம் எதுவோ அதுதான் தீர்வு. விவசாயிகளை அணி திரட்டி தொழிலாளி வர்க்கம் நடத்தும் போராட்டமே அது. பிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் சேர்த்து செய்யப்படும் போராட்டமே அது.



//பிற தேசிய இனத்தை சேர்ந்தவர்கலின் பெருமெடுப்பிலான தமிழ குடியேற்றஙலையும் உள்ளக அரசியலை அவர்கல் தீர்மானிபதை பற்றி என்ன கருதுகிறீர்கல்

கேரள தேயிலை தோட்டங்கலில் ஈழ மலயகத்தை விட மோசமான நிலையில் ஒடுக்கப்பட்ட தளத்தை சேர்ந்த தமிழர்கள் சுரன்டப்படுவதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா //

கேரளத்தில் சுரண்டப்படும் தமிழருக்கு வருந்தும் உங்கள் உள்ளம். இதே போல, இதை விட கோடுரமாக தமிழகத்தில் தமிழரை சுரண்டும் தமிழ் தேசிய முதலாளிகளூக்காக வருந்துமா?

இந்த சுரண்டலை தீர்மாணிப்பதில் தேசியம் பிரதான பாத்திரமாற்றுகீறதா அல்லது வர்க்கம்-சாதியா?



//இந்திய தேசியத்தின் சவளைபிள்ளைகளாக தமிழர்கள் இழிவு செய்யப்படுவதர்க்கும் சுரன்டப்படுவதர்க்கும் மற்ற தேசிய பாட்டாளி வர்க்க அமைப்புகலிடமிருந்து எதிர்வினை என்ன, முல்லை பெரியாரு, காவிரி ...... //


சவளைப் பிள்ளை தமிழகம்தான் இந்தியாவிலேயே முதலாளித்துவம் அதிகம் வளர்ந்த மாநிலம்....

நகர்மயமாக்கம் அதிகம் நிகழ்ந்த மாநிலம். அதாவது தேசியம் பேசும் தேசிய முதலாளிகளின் இந்திய சமஸ்தானம் தமிழகமே.

இந்திய தேசியம் என்ற கூட்டிணைவின் அத்தனை வசதிகளையும், பிற எந்த மாநிலத்தையும் விட தமிழகம் அதிகப்படியாக்வே அனுபவித்துள்ளது. இதற்க்கு தமிழகத்தின் வரலாற்று பின்புலம் ஒரு காரணியாக இருந்தால் கூட, திராவிட கட்சிகளின் வலுவும், மாநில கட்சிகளின் வலுவும் பிரதான காரணீயாக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் மறந்துவிட்டால் இப்படிப் பேசலாம்.


//போராட்ட நீட்சிக்காகவும் அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறயின் கீழ் தமிழ் மக்கள் பலியிடப்படக் கூடாது என்பதர்க்கான புலிகலின் சில விட்டுக்கொடுப்புகல் மீது நீஙள் இந்த அளவு பாய வேன்டிய தேவை என்ன //

எது விட்டுக் கொடுப்பு? விட்டால் அமெரிக்கா, சிங்கள் இன வெறிக்கு எதிராக இருக்கீறது என்று சொல்வீர்கள் போல.

பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கும் இடையில் அமெரிக்காவின் பாத்திரம் என்னவோ அதுதான் சிங்கள் அரசிற்க்கும் புலிகளுக்கும் இடையில் இருப்பது.

என்ன ஒரேயொரு வித்தியாசம் புலிகள் இன்னும் இந்திய அரசு அளவுக்கோ அல்லது பாகிஸ்தான் அளவுக்கு சோரம் போகவில்லை. அல்லது அதற்க்கான ஧நேரடி வாய்ப்புகள் இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

அமெரிக்காவின் நேரடி ஒடுக்குமுறை இலங்கையில் இல்லை என்கிறீர்களா? ஒரு வேளை புலிப் பகுதியில் பெரிய அளவில் இல்லாமலிருக்கலாம். அது யுத்த பூமியாக இருப்பதால்.

மற்றபடி அந்த பகுதிகளுக்கும் தமது சுரண்டலை விரிவுபடுத்துவதே அமெரிக்க அண்ணன்மார்களின் நோக்கம்.

யுத்தம் தமது வியாபார நலன்களுக்கு விரோதமாக இருப்பதாலேயே சமாதான பேச்சு வார்த்தைக்கு ஏகாதிபத்தியங்கள் இத்தனை முன்னெடுப்பு செய்கிறார்கள்.

விட்டுக் கொடுப்பது குறித்த உங்களது கருத்திலிருந்து தெரிய வருவது என்னவென்றால் சிங்கள் இன வெறி அரசு வலுவில்லாத அரசாக இருப்பதாலேயே அதனை எதிர்க்க துணிகிறார்கள் புலிகள். மாறாக அமெரிக்கா போன்ற வலுவான ஆள் வந்தால் சமரசம் செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

சில கேள்விகள்,

சிங்கள் இன வெறி அரசு சிங்களர்களுக்கு நேர்மையாக இருக்கீறதா?

சிங்கள் இன வெறி அரசு சிங்கள் தேசிய இனத்தின் உண்மையான வளர்ச்சிக்கோ அல்லது உரிமைக்காகவோ செயல்படுகீறதா?

அது ஒரு பௌத்த பார்ப்ப்னியமாக இருக்கீற்தா இல்லையா?


//போராட்ட நீட்சிக்காகவும் //


போராட்ட நீட்சி என்றால் எத்தனை நாள்? தனி தமிழ் ஈழம் சாத்தியமா?

தனி தமிழிழம் வந்துவிட்டால் ஈழத்தின் பிரச்சனைகள் தீர்ந்து விடுமா?

இன வெறி ஒடுக்குமுறை இருக்காது, மாறாக சாதிய, மத, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை சுரண்டல் இருக்குமா இருக்காதா?

இதனை எதிர்த்து புலிகளின் நீண்ட கால திட்டம் என்ன?

இவை எது பற்றியும் அவர்களிடம் எந்த ஒரு திட்டமும் இல்லையென்பதாலேயே அவர்களின் சுய அழிவுப் பாதையை விமர்சிக்கிறோம்.

புலிகளை விமர்சித்தாலே ஈழத்தமிழர்களுக்கு விரோதியாக சித்தரிக்கும் பாசிச தந்திரம் இங்கும் அரங்கேறுவதில் எனக்கு வியப்பொன்றூமில்லை.

ஆனால் இதே புலிகளின் மீதான் ஒவ்வொரு அடக்குமுறையின் போதும், அது தேசியத்தின் மீதான அடக்குமுறையாக இருக்கின்ற பட்சத்தில் குரல் எழுப்பியுள்ளது ம க இக என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலிகளை விமர்சிப்பதும், தற்போதைய செயல் தந்திரத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதும் ஈழத்திற்க்கான தியாகங்களையெல்லாம் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது அவற்றை அவமதிப்பதாகவோ கருதப்படுவது எனக்கு விந்தையாக இருக்கிறது. தீலிபனின் உண்ணாவிரதமும், தியாகமும் ஊட்டிய சுயமரியாதை உணர்வுக்கு ஈடு சொல்ல ஒரு உதாரணம் இன்றளவும் என்னால் சொல்ல இயலவில்லை.

இந்தியாவில் போலி சுதந்திரம் என்று நாம் சொல்வதன் அர்த்தம் 1947க்கு முன்பு போராடிய அத்தனை பேரையும் இழிவுபடுத்துவதாக அர்த்தம் கொள்வதற்க்கல்ல. மாறாக அவர்களின் தியாகங்களீன் மீது ஆதிக்க சக்திகள் சவாரி செய்வது கண்டு பொங்கியெழு என்று உணர்வூட்டவே பயன்படுகிறது.

அதே போலத்தான் நேற்றைய, இன்றைய ஈழப் போராளிகளின் தியாகங்கள் ஈழத்தை எங்கு கொண்டு செலகீறது என்ற கடினமான உண்மையை பாருங்கள் என்கிறோம். அதை பரிசிலித்து கூட பார்க்காமல் ஈழ விரோதி என்று பட்டம் கட்டுவதையே சிலர் செய்கிறார்கள்(தோழர் நான் உங்களை இங்கு குறிப்பிடவில்லை)

இன்று இலங்கையில் என்ன நடக்கிறது? அந்த பக்கம் புலிகளின் பெயரில் தனது பாசிசத்தையும், ஏகாதிபத்திய சேவையையும் கேள்வி முறையின்றி செயல்படுத்தி வருகீறது லங்கா இன வெறி அரசு.

இந்த பக்கம் புலிகளும் கூட சிங்கள அரசின் பெயரைச் சொல்லி ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்து வருகின்றனர். இதன் அர்த்தம் சிங்கள் இன வெறி அர்சும், புலிகளும் ஒன்று என்பது அல்ல. மாறாக கூடிய விரைவில் அப்படியொரு வித்தியாசமற்ற நிலைக்கு புலிகள் வள்ர்ந்து செல்வர் எனப்தனை குறிக்கும் முகமாகவே சொல்கிறேன்.

ஆக மொத்தத்தில் ஈழத்தமிழர்களில் ஒரு பெரும் பிரிவினர், புலிகளின் ஆதரவாளர்கள் தவிர்த்து உலகில் எங்குமே புலிகள் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான இயக்கமாக இன்று பார்க்கப்படவில்லை. ஏற்றுக் கொள்ள கடினமானதாக இருந்தாலும் இதுதான் உண்மை.

எங்கு தோல்வி நிகழந்தது?

ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை என்பது அந்த தேசத்தின் மக்களை மட்டும் நம்பி ஏற்ப்பட்டுவிடுமா என்றால் ஆம் ஒரு 200 வருடத்துக்கு முன்பு சாத்தியம். இன்று ஏகாதிபத்திய காலகட்டத்தில் சாத்தியமில்லை. உலக ஜனநாயக சக்திகளின் ஆதரவு இன்றி ஒரு தனியொரு தேசத்தின் விடுதலை சாத்தியமில்லை. அப்படி ஒரு உலக ஆதரவை பெற புலிகளீன் செயல்பாடு திட்டம் எனன்வாக உள்ளது? அப்படி உலக சக்திகளை அணி திரட்ட பொது நலனாக முன்னிறுத்த புலிகள் எதனை கொண்டுள்ளன்ர்? தேசியமா?

தமது ஆதரவு சக்திகள் என்று புலிகள் யாரைத்தான் வரையறுத்துள்ளனர்?

வெறுமே ஈழத்தின் விடுதலை விடுதலை என்ற பெயரில் இன்னும் இன்னும் தனி தனிழிழத்திற்க்காக எத்தனை லட்சம் உயிர்கள் பலியிடப் பட காத்திருக்கின்றன. (மக்கள் யுத்தத்தை இங்கு ஒப்பிட காத்திருக்கும் திர்புவாதிகளே, அதனையும் சுய அழிவுப் பாதை என்றே விமர்சிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்).

உலகத்தின் இயக்கத்தில் ஒரு சிறு பகுதிதான் ஈழம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் தோழர்.

அதனது இயக்கத்தை தனித்து ஆய்வு செய்து அதனது பிரச்சனைக்கு மட்டும் தனித்து தீர்வு சொல்வது இயலாத கற்பனை தீர்வாகவே இருக்கும்.

தேசியம் என்பதன் வரலாற்று கட்டம் என்னவென்பதையும். அப்படி ஒரு கோரிக்கையின் அடிப்படை சமூக அமைப்பு என்னவாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால். தேசியம் என்ற பெயரில் எழுப்பப்படும் கோரிகைகைகள் எல்லாம் தேசிய கோரிக்கை என்ற புரிந்து கொள்வதில் உள்ள தவறை உணர்வீர்கள். தேசிய முகமூடி அணிந்து வலம் வரும் நிபி, ஏகா, தரகு கும்பலை புரிந்து கொள்வீர்கள்.

ஈழ அரசியல் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது சிங்கள் இன வெறியும், தமிழர்களின் உரிமையும் மட்டும் சமபந்தப்பட்ட விசயமில்லை.

இந்த இரண்டையும் மட்டுமே வைத்து பரிசீலிப்பேன் என்றால் அது எப்படி சரியாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்.



//ஒட்டு மொத்த இலங்கை புரட்சி என்றால் மட்டும் புஷ் அண்ணன் கையை கட்டிகொண்டு வேடிகை பார்ப்பார இல்லை, நிஜமாகவே ஐயம்தான்//


வேடிக்கை பார்க்க மாட்டார். தனி ஈழத்திற்க்கு மட்டும் புரட்சி என்றால் மட்டும் அண்ணன் புஷ் வேடிக்கை பார்ப்பார? சொல்லுங்கள்.(புரட்சி என்பது சமூக மாற்றம், ஆட்சி மாற்றம் அல்ல. புலிகள் ஆட்சிக்கு வந்தால் அது புரட்சி அல்ல. சமூக மாற்றம் கோரும் அடிப்படை பொருளாதார மாற்றம் கொண்டு வந்தால்தான் அது புரட்சி. அப்படி ஒரு சாத்தியமான புரட்சி என்பது ஏகா சுரண்டலை விரட்டுவது மட்டுமே. அதனை புலிகள் தற்போதைய தங்களது ஆட்சிப் பகுதியில் செய்து பார்க்கட்டும் பிறகு அமெரிக்க அண்ணான் எப்படிப்பட்டவன் என்பது தெரிய வரும்).

தமிழர்கள் செத்து மடிவதை தவிர்க்க அமெரிக்காவுடன் கைகலந்த புலிகளுக்கு ஏன இதே காரணத்திற்க்காக சிங்கள் உழைக்கும் மக்களுடன் கை கலக்க முடிவதில்லை. அதுவும் கூட தமிழர்க்ள் செத்து மடிவதை தடுக்கவே செய்யும். என்ன இதை செய்வத்ற்க்கும்('ம்' அழுத்தம்) நீண்ட கால போராட்டம் தேவைப்படும்.

27 வருட ஈழப் போராட்டம் இன்று சாதித்துள்ளதைக் காட்டிலும் ஈழ, சிங்கள் உழைக்கும் மக்கள் கூட்டணீக்கான முயற்சி சிறிது அதிகமாகவே சாதித்திருக்க்க வாய்ப்பிருந்தது. துரதிருஷ்டவசமாக ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக தம்மை முன்னெடுத்துக் கொள்ள பிற ஜனநாயக சக்திகள் அனைத்தையும் அழித்து நிர்மூலமாக்கினர் புலிகள்.

இவையெல்லம் பேசப்படக்கூடாது ரகசிய்ங்கள் ஏனேனில் இவற்றை இன்று பேசினால் அது ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாக முத்திரைக் குத்தப்படும்.

எனக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வருகிறது. ஈழத் தமிழர்க்ள் என்பவர்கள் புலிகள் மட்டும்தானா?



//உச்சிமுடி நட்டுக்கொன்டு நிற்க்கும் அளவுக்கு தமிழ் தேசியம் பேசும் ஆதிக்க ஜாதிகலின் வர்க்க குனத்தை பற்றிய புரிதலும் எதிர்ப்புணர்வும் கொன்டவன்தான் நானும் என்கிற கன்ணோட்டத்தோடு எனக்கு பதில் தருதல் நலம் //

அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தோழரே :-))

இதை உங்களுடனான எனது எதிர்வினைக்கும், புரளி பேசிய தரகு வர்க்க ரசிகர்களுக்கான எனது எதிர்வினைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.


அசுரன்
#############

#########
தேசியம் குறித்த பார்வை. சில மாற்றுக் கருத்துக்கள் உள்ள போதும். இந்த கட்டுரை தேசியம் அரசியலில் உள்ள சில அடிப்படை சிக்கல்களை வெளிக் கொணருகிறது.

தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்:
http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.html
##########


இது ஸ்டாலின் குரு சொன்னது:
##########
தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,
#########


############
தோழார் ஸ்டாலின் குரு,

//தனி தேசியம் என்று கூறவில்லை, தனி தேசியங்களில்தான் தீர்வு என்று கூறுகிறேன்,

இந்தியாவில் வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகலில் இருக்கும், உற்பத்தி முறைகலில் பாரிய வேறுபாடுகள் கொண்டுள்ள தேசிய் இனங்கலின்(முறையாக தேசிய இனங்கலை இனம் காண்பது கூட சாத்தியமற்ற நிலையிலிருப்பது யதார்த்தம்) ஒட்டுமொத்த போராட்டம் என்கிற வழிமுறை மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு என்கிற நிலையில்

ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தை அடைந்துள்ள தேசிய இனங்கலின் படிப்படியான போராட்டம் என்கிற வழிமுறைதானே சாத்தியமாக இருக்கும் ?//

ஏற்றத்தாழ்வான வளர்ச்சி என்பதுதான் ஏகாதிபத்தியத்தின், நிலபிரபுத்துவத்தின் இயல்பு. தமிழகத்தில் முதலாளித்துவம் ஒப்பீட்டளவில் வளர்ந்துள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அந்த வளர்ச்சி குறிப்பிட்ட பண்பு வகைப்பட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளதா? அதாவது மக்களின் ஜனநாயக பண்பில்?

ஏதோ சில வேறுபாடுகள்தான் உள்ளனவே அன்றி, இந்தியா முழுவதும் சமூக பொருளாதார வளர்ச்சி என்பது ஒரே அளவில்தான் உள்ளன. இன்னும் தெளிவாக சொன்னால் இந்தியா ஒரு அரைக் காலனிய, அரை நிலபிரபுத்துவம் என்ற வரையறை தமிழகத்திலோ அல்லது வேறு முன்னேறிய தேசியத்திலோ பொருந்தாது என்ற நிலையில் இல்லை.

எனவே வளர்ச்சியில் வெவ்வேறு நிலை என்று பேசினால் தர்மபுரியையும், தென் தமிழகத்தையும் பிரிகக் வேண்டி வரும். ராமநாதபுரத்தையும், சென்னையையும் ஒன்று சேர்த்து புரட்சியே செய்ய முடியாது என்றும் புரிந்து கொள்ள ஏதுவாகும்.



///
நான் பட்டியலிட்டுள்ள இழப்புககலை வெரும் தேசிய இன பிரச்சினை என்ற ஒற்றை வார்த்தைக்குல் சிறை வைப்பது எப்படி தோழா

நெய்வெலியை பற்றி நான் கூறியது வேறு அர்த்தத்தில், தமிழ் தேசிய உடைமையாக்குவதன் மூலம் தரகு பொருளாதாரத்தை சீர்குலைப்பதை கன்னட இனவெறி நிலபிரபுத்துவ கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் வழிமுறை பற்றி///

எனது கேள்வி ஒன்றுதான் இது கர்நாடகா ந்஢லபிரபுத்துவத்திற்க்கு என்ன பாடம் கற்றுத் தரும்? செப் 11 குண்டு வீசி அமெரிக்காவிற்க்கு கற்றுத் தரப்பட்ட பாடம் போலவா?

இது ஓப்பீடிற்க்குதான். இந்த நடவடிக்கை அங்குள்ள உழைக்கும் மக்களை கன்னட நிலபிரபுத்துவத்துடன் இன்னும் அதிகமாக ஒன்றிணைய உபயோகப்படுமே அன்றி அதனை தனிமைப்படுத்தி அழிக்க உதவாது. இன்னும் சொன்னால் இங்குள்ள தமிழர்கள் தேசியம் என்ற பெயரில் பிற உழைக்கும் மக்களிடமிருந்து தனிமைப்படுவர்.

இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வேட்டையாடப்படுவர். இங்கு தமிழ் நாட்டிலோ அதே நிலபிரபுத்துவ சக்தி மக்களை சாதி ரீதியாக பிரித்து அதே சுரண்டலை செய்து கொண்டே இருக்கும்.

காவிரி பிரச்சனையும் தீராது, கர்நாடக, தமிழக விவசாயிகள் மீதான சுரண்டலும் தீராது.

நீங்கள் குறிப்பிட்டிருந்த இழப்புகள் தேசிய இன பிரச்சனை இல்லை என்று சொன்னால் தேசிய இன பிரச்சனையை தீர்ப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் எப்படி தீரும்?

அவை தேசிய இனப் பிரச்சனைகள் மட்டுமில்லை என்று நீங்கள் சொன்னது சரியே. அவற்றிற்க்கான தீர்வு என்பதும் தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதால் மட்டும் கிட்டிவிடாது என்பதை புரிந்து கொள்ள இயலுகிறதா?



///
தமிழ் தேசிய முதலாலித்துவம் வளர்ந்துள்ளதா ?

கருணானிதி அன்டு ஃபேமிலி,ஜெயா & கோ ராமதாஸ் &கோ மற்றும் ...... சில கம்பெனிகல் தவிர்த்து சில தமிழ் தேசிய முதலாலிகலின் பெயர்கலை தந்தால் எனக்கு வாதாடுதல் எளிது///

நீங்களே சற்று முன்பு சொன்னது போல தமிழகத்தில் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது எனில் நீங்கள்தான் உண்மையில் அதற்க்கான ஆதாரம் தர வேண்டிய நிலையில் இருக்கீறீர்கள் :-)))

தமிழ் தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ளது. ஒப்பீட்டளவி. ஆனால் அது சுதந்திரமாக வலுவான ஒரு வர்க்கமாக இருக்கீறதா? அப்படி இருந்தால் திருப்பூர்களும், ஓசூர்களும் ஏன் ஏகாதிபத்திய பின் நிலங்களாக நிலவுகின்ற்ன?

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனி வருவதை எதிர்க்க ம க இக என்ற பாட்டாளி கட்சியின் துணையுடன் போரட வேண்டிய நிலையில் இருக்கும் மர்மம் என்ன?

மர்மம் ஒன்றுமில்லை. தமிழகம் ஓப்பிட்டளவில் முதலாளித்துவம் வளர்ந்துள்ளது என்பதன் அர்த்தம் ஏதோ மற்ற மாநில்ங்களை விட மிக மிக மிக மிக முன்னேறீயுள்ளது என்ற அர்த்தத்தில் அல்ல. மற்ற மாநிலஙக்ள் கழுத்தளவு சக்தியில் இருந்தால் தமிழகம் கழுத்துக்கு ஒரு ரண்டு இன்ச் கம்மியாக சக்தி இருக்கும் அளவு முன்னேறியுள்ளது என்ற அர்த்தத்திலேயே.

அதனாலேயே இந்தியா முழுவதற்க்குமான புரட்சியின் தன்மை மாறவில்லை. ஆனால் புரட்சிக்கு எதிரான வர்க்க சக்திகளுடன் போராடும் செயல் தந்திரம் மாறுவதற்க்கு இந்த ஏற்றத்தாழ்வான நிலை காரணமாகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.



//
சிங்கள அரசுக்கு சுய வழு என்ற ஒன்றே கிடையாது அமெரிக்கா முதல் பேச்சுவார்த்தை நாடகமாடும் நார்வே வரை செய்யும் உதவிகலால்தான் அது நிலைத்திருக்கிறது சிங்கள இனவெறீ அரச எதிர்ப்பு என்பதே அமெரிக்க எதிர்ப்புதான்
//

இது சிங்கள் அரசுக்கு மட்டும் பொருந்தும் விசயமல்ல என்பதில்தான் நான் வேறுபடுகிறேன். விடுதலைப் புலிகள் ஜனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? உலக ஏகாதிபத்தியங்களின் மறைமுக ஆதரவு அதற்க்கு உண்டு என்பதனை இங்கு கொடுக்கப்பட்ட சில உதாரணங்களீலிருந்தே புரிந்து கொள்ளலாம்.(விமான தாக்குதல் சமபந்தப்பட்ட கட்டபொம்மன் சொன்னதை நான் இங்கு சொல்லவில்லை).


அசுரன்
############

Labels: ,